Wednesday, October 22, 2008

இறை ஞானம்



காண்பதனைத்தும் இறைவனே

ஆம் நாம் இவ்வுலகில் காண்பதனைத்தும் இறைவனே

காண்பதனைத்தும் அவனின்

கைவண்ணம் அன்றி வேறொன்றுமில்லை

நாம் பயன்படுத்தும் அனைத்து

பொருட்களும் அவனுடையதே
நம்முடைய உயிரும்

அது தங்கியுள்ள உடலும் அவன் அளித்ததே


நமகென்று எதுவுமே சொந்தமில்லாத நிலைமையில்

நான் என்றும் .எனது என்றும் என்ற எண்ணம்

எங்கிருந்து வந்தது ?

அதுதான் மாயை
மாயை நீங்க மாயவனை சிந்திக்க வேண்டும்
அப்போதுதான் உடல் மீதும்

உடைமைகள் மீதும் மோகம் நீங்கி ஞானம் சித்திக்கும்

ஏமாற்றமில்லாமல் வாழ எந்த செயலையும்

பலன் கருதாது செய்யவேண்டும்

அகந்தை நீங்க இறைவனிடம்

முழு நம்பிக்கை வைத்து அனைவரையும்

இறைவனின் வடிவங்களாக கருதி சேவை செய்ய வேண்டும்

தனக்கு துன்பம் விளைவிக்கிறவர்களிடமும் கூட

அன்பு காட்டவேண்டும் .

மேலே கண்டவற்றை நினைவில் கொண்டு

வாழ்க்கையை நடத்தினால் துன்பமில்லா வாழ்வும்

ஞானமும் ஒருங்கே சித்திக்கும் .

இவ்வுலகில் அனேக மஹான்கள் பாடுபட்டு

இறைஅருளை பெற்று மரணமில்லா

பெருவாழ்வை அடைந்துள்ளார்கள்.



.நாமும் முயற்சி செய்தால்

அந்த நிலையை அடைவது சாத்தியமே .

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home