Thursday, July 2, 2009

பட்டினத்தார் /டாவோயிசம்

பட்டினத்தார் /டாவோயிசம்
பிறந்தன இறக்கும்
இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும்
மறைந்தன தோன்றும்
உவப்பான வெறுப்பாம்
வெறுப்பான உவப்பாம்
இன்பமும் துன்பமும்
இருநிலத்து அருந்தினை
ஒன்றைஒன்று ஒழியாது உற்றவை
ஒன்றைவிட்டு ஒன்றை பிரிக்க முடியாததால்
இரண்டையும் சேர்த்தே ஏற்றனை

மனிதன் தனக்கு பிடித்தமானதை
தனியே பிரித்து அடைய நினைக்கிறான்
இயற்க்கைக்கு மாறானது என்பதால்
அதன் விளைவுகளால் துன்பப்படுகிறான்

பிறப்பு நேரிட்டால் இறப்பு நேரிடும்
மரியாதையை விரும்பினால் அவமரியாதை தொடரும்

இரண்டையும் சேர்த்து ஏற்றுக்கொள்
இல்லாவிட்டால் இரண்டையும் சேர்த்தே விட்டுவிடு

அழகென்பதும் அவலக்ஷனம் என்பதும் கிடையாது
இயற்க்கை அதனதன் போக்கில், இருக்கிறது
அதை நீ தேவையில்லாமல் கூறுபடுத்துகிறாய்
உன்னுடைய தேர்வையோ உன் புறந்தள்ளலையோ
இயற்க்கை தன்னுடைய வழிமுறையாக கொள்வதில்லை

நன்மை தீமை என்னும் இரு கூறுகள் ஒரு நாணயத்தின்
இரு பக்கங்கள் போல
நன்மையில் தீமையின் கூறுகளும்
தீமையில் நன்மையின் கூறுகளும்
இருந்தே தீரும்
இருவினை மலத்தை அறு
இரவு பகல் ,இகம் பரம், வரவு,செலவு
என்று பிரித்து எண்ணப்படுகின்ற நிலையினை கடந்து
தில்லை ஜோதியை நினை
எனது அற
நினைவு அற
இருவினை மலம் அற
வரவோடு செலவு அற
மருள் அற
இரவோடு பகலற
இகம் பரம் அற
ஒரு முதல்வனை தில்லையில் முளைத்தெழும் ஜோதியை நினை.