Monday, July 27, 2009

சொல் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

சொல் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?
திருவள்ளுவர் திருக்குறளில் கூறுகின்றார்
கேளுங்கள் (அதிகாரம் 10 இனியவை கூறுதல்)

1.சொல்லப்படும் சொற்களில் அன்பு கலந்திருக்க வேண்டும்
2.அதில் வஞ்சக எண்ணங்கள் கலந்திருக்கக்கூடாது
3.அதை மலர்ந்த இன்முகத்தோடு பேசக்கூடிய
சொல்லாக இருத்தல் வேண்டும்
4.சொல்லப்படும் சொற்கள் இனிமை பயத்ததாக
இருத்தல் வேண்டும்
5.எல்லோரிடமும் இனிமையாக பேசுபவனை
வறுமை என்றும் அணுகாது
6.பணிவோடு அகந்தையின்றி
இனிமையாக பிறரிடம் பேசுவதே
ஒரு மனிதருக்கு நல்ல அணிகலன் .
உடலின்மீது அவன் அணிந்துகொள்ளும்
ஆபரணங்கள் அன்று
7.நன்மை பயக்கும் இனிய சொற்கள்
இருக்கும்போது மனிதர்கள் ஏன் துன்பம்
விளைவிக்கும் கடும் சொற்களை
பயன்படுத்துகின்றாரோ ?
8.சுவையான பழங்கள் போல்
இனிய சொற்கள் இருக்கும்போது இனிப்பற்ற காய்களைபோன்ற
கடும் சொற்க்களை பயன்படுத்தலாமோ ?

இனிமையான நன்மை விளைவிக்கும் சொற்க்களை பேசி பிறரை இன்புற செய்து நாமும் இன்புறுவோமாக

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home