Friday, October 23, 2009

இறைவா உன்னிடம் வேண்டுகிறேன்


இன்றைய பொழுது இனிதாய் விளங்கிட
இறைவா உன்னிடம் வேண்டுகிறேன்

காணும் அனைத்திலும் நிறைகளையன்றி
குறைகளை காணா மனம் தந்திடுவாய்

எனக்கு இன்றுமுதல்

வீட்டிலும் நாட்டிலும் அமைதி நிலவியே
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு
வாழ அருள் செய்திடுவாயே

வலியவர் எளியவரை வதைப்பதை விடுத்து

அவர்கள் வாழவழி வகை செய்ய உதவும் நற்குணம்
மலர்ந்திட செய்வாயே

சுற்றுப்புரத்தினை அழித்து சுகாதாரத்தை கெடுத்து

நோயில் வீழ்ந்து தவிக்கும் மக்களுக்கு
நல்லறிவினை அளித்து நலம்

பெற செய்திடுவாயே

மதியை மயக்கும் போதை பொருட்களை விடுத்து

,மதியை கெடுக்கும் காட்சிகளை காண்பதை தவிர்த்து
மனதை பண்படுத்தும் நல்லிசையில்

நாட்டம் கொண்டிட செய்வாயே

மக்கள் உள்ளத்தில் கள்ளம் நீங்கியே
அன்பு பெருக்கெடுத்து இவ்வுலகை
இன்புலகமாக மாற்றிடுவாயே

சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகள் நீங்கி

அனைவரும் சமாதானமாக சமரச வாழ்வு

வாழ அருள் செய்திடுவாயே .