Wednesday, November 4, 2009



அண்டர் குலத்திற்கு அதிபதி ஸ்ரீராமன்


தன்னை போன்ற சக மனிதர்களையே கொன்று தின்ற


அசுரர்களை அழித்தவன் ஸ்ரீராமன்


அகந்தை கொண்ட ராவணனை சம்ஹாரம் செய்தவன் ஸ்ரீராமன்


நம் மனதில் குடிகொண்டு நம்மை ஞானத்தை


அடையவிடாமல் செய்யும்அகந்தையை


அழிக்க வேண்டுமென்றால் நாம் ராம நாமத்தை


ஜபம் செய்ய வேண்டும்


நாமம் ஜெபிக்க மிக எளிது


காலம் நேரம் எதுவும் தேவையில்லை


ஆசாரங்கள் எதுவும் தேவையில்லை


அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் போதும்


ராம நாமம்தான் நமக்கு பந்தத்திலிருந்து விடுதலை அளிக்கவல்லது


மற்ற மந்திரங்கள் எல்லாம் நமக்கு காம்ய பலன்களைதான் தரும்


ராம நாமம் நம்மை எல்லாவிதமான ஆபத்துக்களிலிருந்து நிச்சயமாக காக்கும்


நமக்கு மனசாந்தி அளிக்கும்


நம்மை எப்போதும் கவசம்போல் இருந்து ராமநாமம் சொல்பவரை


காக்கும் என்பதை அந்த மந்திரத்தை சொல்பவர்கள் அனுபவத்தில் உணரலாம்


எல்லோரும் கைவிட்டாலும் ராம நாமம் நம்மை என்ன்னிலையிலும் கைவிடாது


இது சத்தியம் சத்தியம் .


நம்முடைய ஆன்மாவில் ஸ்ரீராமன் கொலு வீற்றிருக்கின்றான்.


அவன் நாமத்தை விடாது சொல்பவர்கள் இதயத்தில்


அவனை சத்தியமாக தரிசிக்க முடியும்.


ஸ்ரீராமனின் உருவம் உங்களுக்காக ஓவியமாக


ஓம் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெயராம்

Sunday, November 1, 2009

விண்ணும் மண்ணும் நட்பு கொள்ளமுடியுமா ?




விண்ணும் மண்ணும் நட்பு கொள்ள முடியுமா ?


ஏன் முடியாது .?


விண்ணில் ஒளிரும் சூரிய கதிரினால் உலகம் வாழுகிறது


விண்ணில் தவழும் மேகங்கள் பொழியும் மழையால் அனைத்து உயிரினங்களும் தாவரங்களும்,உயிர் வாழுகின்றன .


ஆனால் கடந்த காலத்தில் வானரனும் (விண்ணுலகிலிருந்து ஸ்ரீ நாராயணன் மண்ணில் நரனாக ஸ்ரீராமனாக அவதாரம் செய்து ,வனத்தில் வசித்து வந்த சுக்ரீவன் என்னும் வானரதுடன் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டதே அந்த நிகழ்வு )



இருவரும் மனையை இழந்தவர்கள் ,மனைவியை இழந்தவர்கள் ராமாயண காவியத்தின் பார்வையில் .


ஆனால் இறைவன் தன பக்தனுக்கு நண்பனாக வந்தும் உதவுவான் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி .


அந்த நிகழ்வை நினைவுபடுத்தும் ஓவியம்தான் மேலே காண்பது .